சங் 106
106
சங்கீதம் 106
1அல்லேலூயா, யெகோவாவை துதியுங்கள்;
அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
2யெகோவாவுடைய வல்லமையான செயல்களைச் சொல்லி,
அவருடைய துதியையெல்லாம் சொல்லக்கூடியவன் யார்?
3நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும்,
எக்காலத்திலும் நீதியைச் செய்கிறவர்களும் பாக்கியவான்கள்.
4யெகோவாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு,
உம்முடைய மக்களின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து,
உம்முடைய சுதந்தரத்தோடு மேன்மைபாராட்டும்படிக்கு,
5உம்முடைய மக்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து,
உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும்.
6எங்களுடைய முன்னோர்களோடு நாங்களும் பாவஞ்செய்து,
அக்கிரமம் நடப்பித்து, தீமைகளைச் செய்தோம்.
7எங்களுடைய முன்னோர்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும்,
உம்முடைய கிருபைகளின் பெருக்கத்தை நினைக்காமலும் போய்,
சிவந்த கடலின் ஓரத்திலே கலகம்செய்தார்கள்.
8ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி,
தம்முடைய பெயரினிமித்தம் அவர்களைக் காப்பாற்றினார்.
9அவர் சிவந்த கடலை அதட்டினார், அது வற்றிப்போனது;
காய்ந்த தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகச்செய்தார்.
10பகைவரின் கைக்கு அவர்களை விலக்கிக் காப்பாற்றி, எதிரியின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார்.
11அவர்களுடைய எதிரிகளைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது;
அவர்களில் ஒருவனும் மீதியாக இருக்கவில்லை.
12அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து,
அவருடைய துதியைப் பாடினார்கள்.
13ஆனாலும் சீக்கிரமாக அவருடைய செயல்களை மறந்தார்கள்;
அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்காமல்,
14வனாந்திரத்திலே ஆசையுள்ளவர்களாகி,
பாலைவனத்திலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
15அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்,
அவர்கள் சரீரத்திலோ வியாதியை அனுப்பினார்.
16முகாமில் அவர்கள் மோசேயின்மேலும்,
யெகோவாவுடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள்.
17பூமி பிளந்து தாத்தானை விழுங்கி,
அபிராமின் கூட்டத்தை மூடிப்போட்டது.
18அவர்கள் கூட்டத்தில் நெருப்பு பற்றியெரிந்தது;
நெருப்பு ஜூவாலை துன்மார்க்கர்களை எரித்துப்போட்டது.
19அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி,
வார்க்கப்பட்ட சிலையை வழிபட்டார்கள்.
20தங்களுடைய மகிமையைப்
புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.
21எகிப்திலே பெரிய செயல்களையும்,
காமின் தேசத்திலே அதிசயங்களையும்,
சிவந்த கடலினருகில் பயங்கரமானவைகளையும் செய்தவராகிய,
22தங்களுடைய இரட்சகரான தேவனை மறந்தார்கள்.
23ஆகையால், அவர்களை நாசம்செய்வேன் என்றார்;
அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே,
அவர்களை அவர் அழிக்காதபடி,
அவருடைய கடுங்கோபத்தை ஆற்றுவதற்கு,
அவருக்கு முன்பாகத் திறப்பின் வாசலிலே நின்றான்.
24அவருடைய வார்த்தையை விசுவாசிக்காமல்,
விரும்பத்தக்க தேசத்தை அசட்டைச்செய்தார்கள்.
25யெகோவாவுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமல்,
தங்களுடைய கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.
26அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே இறக்கவும்,
அவர்கள் சந்ததி தேசங்களுக்குள்ளே அழியவும்,
27அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும்,
அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார்.
28அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு,
உயிரில்லாதவைகளுக்கு செலுத்தின பலிகளை சாப்பிட்டு,
29தங்களுடைய செயல்களினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்;
ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது.
30அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்;
அதினால் வாதை நிறுத்தப்பட்டது.
31அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
32மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்;
அவர்களினால் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது.
33அவர்கள் அவன் ஆவியைத் துக்கப்படுத்தினதினாலே,
தன்னுடைய உதடுகளினால் பதறிப்பேசினான்.
34யெகோவா தங்களுக்குச் சொன்னபடி,
அவர்கள் அந்த மக்களை அழிக்கவில்லை.
35அந்நிய ஜாதிகளோடு கலந்து, அவர்களுடைய செயல்களைக் கற்று;
36அவர்களுடைய சிலைகளை வழிபட்டார்கள்;
அவைகள் அவர்களுக்குக் கண்ணியானது.
37அவர்கள் தங்களுடைய மகன்களையும்
தங்களுடைய மகள்களையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள்.
38அவர்கள் கானான் தேசத்து சிலைகளுக்கு பலியிட்டு,
தங்களுடைய மகன்கள் மகள்களுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்;
தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது.
39அவர்கள் தங்களுடைய செயல்களினால் அசுத்தமாகி,
தங்களுடைய செயல்களினால் வேசித்தனம் செய்தார்கள்.
40அதினால் யெகோவாவுடைய கோபம் தமது மக்களின்மேல் எழும்பினது;
அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்.
41அவர்களைத் தேசங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்;
அவர்களுடைய பகைவர்கள் அவர்களை ஆண்டார்கள்.
42அவர்களுடைய எதிரிகள் அவர்களை ஒடுக்கினார்கள்;
அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள்.
43அநேகமுறை அவர்களை விடுவித்தார்;
அவர்களோ தங்களுடைய யோசனையினால் அவருக்கு விரோதமாகக் கலகம்செய்து,
தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்.
44அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ,
அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் பார்த்து,
45அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து,
தமது மிகுந்த கிருபையின்படி மனவேதனை அடைந்து,
46அவர்களைச் சிறைபிடித்த அனைவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார்.
47எங்கள் தேவனாகிய யெகோவாவே,
நாங்கள் உமது பரிசுத்தப் பெயரைப் போற்றி,
உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களைக் காப்பாற்றி,
எங்களைத் தேசங்களிலிருந்து சேர்த்தருளும்.
48இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா
அநாதியாக என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்.
மக்களெல்லோரும் ஆமென், என்பார்களாக,
அல்லேலூயா.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
சங் 106: IRVTam
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.