சங் 141
141
சங்கீதம் 141
தாவீதின் பாடல்.
1யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்,
என்னிடத்திற்கு விரைந்துவாரும்;
நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது,
என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடும்.
2என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும்,
என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும்.
3யெகோவாவே, என்னுடைய வாய்க்குக் காவல்வையும்;
என்னுடைய உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.
4அக்கிரமஞ்செய்கிற மனிதரோடு துன்மார்க்கச் செயல்களை நடப்பிக்கும்படி
என்னுடைய இருதயத்தைத்
துன்மார்க்கத்திற்கு இசைந்துப்போகச் செய்யாமல் இரும்;
அவர்களுடைய ருசியுள்ள உணவுகளில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக.
5நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி,
என்னைக் கடிந்துகொள்ளட்டும்;
அது என்னுடைய தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்;
என்னுடைய தலை அதை நிராகரிப்பதில்லை;
அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்செய்வேன்.
6அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலை மேலிருந்து
தள்ளப்பட்டுபோகிறபோது,
என்னுடைய வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள்.
7பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல,
எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.
8ஆனாலும் ஆண்டவராகிய யெகோவாவே,
என்னுடைய கண்கள் உம்மை நோக்கி இருக்கிறது;
உம்மை நம்பியிருக்கிறேன்;
என்னுடைய ஆத்துமாவை வெறுமையாக விடாதிரும்.
9அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும்,
அக்கிரமக்காரர்களின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி பாதுகாத்துக்கொள்ளும்.
10துன்மார்க்கர்கள் தங்களுடைய வலைகளில் அகப்படுவார்களாக;
நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
சங் 141: IRVTam
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.