1 நாளாகமம் முன்னுரை
முன்னுரை
1 நாளாகமம், 2 நாளாகமம் ஆகிய புத்தகங்கள் எபிரெய வேதாகமத்தில் ஒரே புத்தகமாகவே உள்ளன. இப்புத்தகம் நாடுகடத்தப்பட்டு திரும்பி வந்திருந்த இஸ்ரயேலரை உற்சாகப்படுத்துவதற்கும், தைரியப்படுத்துவதற்கும் எஸ்றாவினால் எழுதப்பட்டது. இங்கு ஆதாமிலிருந்து தொடங்கிய மேன்மையான பூர்வீக வரலாற்றிலிருந்து, பாபிலோனியரால் இஸ்ரயேலர் நாடுகடத்தப்படும் வரையுள்ள வரலாற்றை எஸ்றா மக்களுக்கு எடுத்துரைக்கிறார்.
1 நாளாகமத்தில் முதல் ஒன்பது அதிகாரங்களிலும் யூதா மக்களின் வரலாறு பற்றி கூறப்பட்டுள்ளது. அதன்பின் அரசன் தாவீதின் ஆட்சி, உடன்படிக்கைப்பெட்டி எருசலேமுக்குக் கொண்டுவரப்படல், ஆலயத்தைக் கட்டுவதற்கும் அங்கு வழிபடுவதற்குமாக தாவீதினால் மேற்கொள்ளப்பட்ட ஆயத்தங்கள் ஆகியனபற்றி கூறப்படுகிறது. தாவீதின் மரணத்துடன் இப்புத்தகம் முடிவடைகிறது.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
1 நாளாகமம் முன்னுரை: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.