ஏசாயா 12
12
துதியின் கீதங்கள்
1அந்த நாளிலே நீ:
“யெகோவாவே உம்மைத் துதிப்பேன்.
என்னில் கோபமாயிருந்தபோதிலும்,
உமது கோபம் தணிந்து
என்னைத் தேற்றியிருக்கிறீர்.
2நிச்சயமாய் இறைவனே என் இரட்சிப்பு;
நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்.
யெகோவா, யெகோவாவே என் பெலன், என் பாடல்;
அவரே எனது இரட்சிப்பும் ஆகினார்” என்று சொல்வாய்.
3நீ இரட்சிப்பின் கிணறுகளிலிருந்து
மகிழ்வுடன் தண்ணீரை மொண்டுகொள்ளுவாய்.
4அந்த நாளிலே நீங்கள் சொல்வதாவது:
“யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவருடைய பெயரைப் போற்றுங்கள்;
அவருடைய செயல்களை நாடுகள் மத்தியில் தெரியப்படுத்துங்கள்,
அவருடைய பெயர் உயர்ந்ததென்று பிரசித்தப்படுத்துங்கள்.
5யெகோவா மகிமையான காரியங்களைச் செய்தபடியால் அவரைப் போற்றிப்பாடுங்கள்;
உலகம் முழுவதற்கும் இது அறிவிக்கப்படட்டும்.
6சீயோனின் மக்களே, ஆனந்த சத்தமிட்டு ஆர்ப்பரித்துப் பாடுங்கள்;
ஏனெனில் உங்கள் மத்தியில் இஸ்ரயேலின் பரிசுத்தர்
மேன்மையுள்ளவராய் விளங்குகிறார்.”
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
ஏசாயா 12: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.