யாக்கோபு முன்னுரை

முன்னுரை
இக்கடிதம் கர்த்தராகிய இயேசுவின் சகோதரன் யாக்கோபினால் கி.பி. 45 ஆம் ஆண்டிலிருந்து 48 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது. இக்கடிதம் யூத விசுவாசத்திலிருந்து கிறிஸ்துவை விசுவாசித்தவர்களுக்கே குறிப்பாக எழுதப்பட்டது. இது இயேசுவின் போதனைகளையும், அவருடைய மலைப் பிரசங்கத்தையும் பிரதிபலிக்கிறது. செயலில் காட்டப்படாத விசுவாசம் பயனற்றது என்பதை யாக்கோபு வலியுறுத்துகிறார். பெருமைக்குணம், வேறுபாடுகள், பேராசை, தீய ஆசை, மாயமாலம், உலக சிந்தை, புறங்கூறுதல் போன்ற தீமைகளை அவர் கண்டித்து எழுதுகிறார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

யாக்கோபு முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்