சங்கீதம் 101

101
சங்கீதம் 101
தாவீதின் சங்கீதம்.
1யெகோவாவே, நான் உமது அன்பையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்;
உமக்கே நான் துதி பாடுவேன்.
2நான் குற்றமற்ற வாழ்க்கையை வாழ கவனமாயிருப்பேன்;
நீர் எப்பொழுது என்னிடத்தில் வருவீர்?
நான் குற்றமற்ற இருதயத்துடன்
என் வீட்டின் விவகாரங்களை நடத்துவேன்.
3தீங்கான செயல்களை
நான் என் கண்முன் வைக்கமாட்டேன்.
உண்மையற்ற மனிதரின் செயல்களை நான் வெறுக்கிறேன்;
அவைகள் என்னைப் பற்றிக்கொள்ளாது.
4வஞ்சக இருதயமுடைய மனிதரை என்னைவிட்டுத் தூரமாய் விலக்கிவைப்பேன்;
நான் தீமையோடு எவ்வித தொடர்பும் வைக்கமாட்டேன்.
5தன் அயலாரை இரகசியமாய் அவதூறு செய்கிற மனிதரை
நான் தண்டிப்பேன்;
கர்வமான கண்களையும் பெருமையான இருதயத்தையும் கொண்ட மனிதரை
நான் சகிக்கமாட்டேன்.
6நாட்டில் உண்மையுள்ளவர்களாய் இருப்போர்மீது என் கண்கள் இருக்கும்,
அவர்கள் என்னோடு வாழ்வார்கள்;
குற்றமற்றவனாய் நடப்பவர்களே
எனக்கு ஊழியம் செய்வார்கள்.
7வஞ்சனை செய்யும் யாரும்
என் வீட்டில் வாழமாட்டார்கள்;
பொய்ப் பேசுபவர் யாரும்
என் சமுகத்தில் நிற்கவுமாட்டார்கள்.
8நான் நாட்டிலுள்ள கொடியவர்கள் எல்லோரையும்
காலைதோறும் தண்டிப்பேன்;
தீங்குசெய்யும் ஒவ்வொருவரையும்
யெகோவாவினுடைய நகரத்திலிருந்து அகற்றிவிடுவேன்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங்கீதம் 101: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்