சங்கீதம் 125

125
சங்கீதம் 125
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.
1யெகோவாவை நம்புகிறவர்கள் சீயோன் மலையைப்போல்
என்றென்றும் அசையாமல் நிலைத்திருப்பார்கள்.
2மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருப்பதைப்போல்,
யெகோவா இப்பொழுதும் எப்பொழுதும்
தமது மக்களைச் சுற்றியிருக்கிறார்.
3நீதிமான்களுக்கென ஒதுக்கப்பட்ட நாட்டின்மேல்,
கொடியவர்களின் ஆட்சி நீடிக்காது;
இல்லையெனில், நீதியற்றவர்களும் தீமைசெய்யத்
தங்கள் கைகளை நீட்டலாம்.
4யெகோவாவே, நல்லவர்களுக்கு,
இருதயத்தில் நேர்மையாய் இருப்போருக்கு நன்மை செய்யும்.
5குறுக்கு வழிகளுக்குத் திரும்புகிறவர்களையோ,
யெகோவா தீயவரோடேகூட தண்டிப்பார்.
இஸ்ரயேலின்மீது சமாதானம் உண்டாவதாக.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங்கீதம் 125: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்