சங்கீதம் 47
47
சங்கீதம் 47
கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
1நாடுகளே, நீங்கள் எல்லோரும் உங்கள் கைகளைத் தட்டுங்கள்;
மகிழ்ச்சியின் சத்தத்துடன் ஆர்ப்பரித்து இறைவனைத் துதியுங்கள்.
2உன்னதமானவராகிய யெகோவா அச்சத்திற்கு உரியவர்,
அவர் பூமி முழுவதற்கும் மகா அரசர்.
3அவர் மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார்,
மக்கள் கூட்டத்தை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார்.
4இறைவன் தமக்கு அன்பான யாக்கோபியரை,
தமது உரிமைச்சொத்தாக தேர்ந்தெடுப்பார்.
5இறைவன் மகிழ்ச்சியின் ஆரவாரத்தின் மத்தியில் எழுந்தருளினார்;
யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர்த்தப்பட்டிருக்கிறார்.
6இறைவனுக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள்;
நமது அரசருக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள்.
7ஏனெனில் இறைவனே பூமி முழுவதற்கும் அரசராய் இருக்கிறார்;
அவருக்குத் துதியின் சங்கீதத்தைப் பாடுங்கள்.
8இறைவன் நாடுகளுக்கு மேலாக ஆளுகை செய்கிறார்;
அவர் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.
9மக்களின் தலைவர்கள்,
ஆபிரகாமின் இறைவனுடைய மக்களாக ஒன்றுகூடுகிறார்கள்.
ஏனெனில் பூமியின் அரசர்கள் இறைவனுக்கே உரியவர்கள்;
அவர் மிகவும் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
சங்கீதம் 47: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.