யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள் மாதிரி

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

17 ல் 4 நாள்

யூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறான் என்று இயேசு அறிந்து ஆவியிலே கலங்கினார். எனினும் இரட்சகரின் அன்பு குன்றவில்லை. இந்த அன்பின் அடயாளமாகத்தான் ஒரு கவளம் உணவை அவர் யூதாஸுக்குத் தந்தாரோ? இந்தப் பாசத்தின் வெளிப்பாடுகூட யூதாஸின் இருளை அகற்றவில்லையே! அவன் தனது விகாரமான திட்டத்தைச் செயல்படுத்த எழுந்து இரவின் காரிருளுக்குள் நடந்துவிட்டானே! 

எனக்கு அன்பான தங்கை, தம்பி! இயேசுவுக்கு யூதாஸ் காட்டின பாராமுகம் உனக்கு ஓர் எச்சரிக்கை என்பதை அறிவாயா? இயேசுவுக்கு இவை உகந்தவை அல்ல என்று தெரிந்தும் விடாப்பிடியாக உன் திட்டங்களைச் செயல்படுத்த முற்படுகிறாயா? உனக்கு இழப்பு ஏற்படினும் சுயவெறுப்புடன் இயேசுவுக்கு இசைய உன் திட்டங்களை மாற்றத் துணிவாயா? சோதனை வேளைகளில் சாத்தானுக்கு எதிர்த்து நிற்க உனக்கு வேண்டியது என்ன என்று தெரியுமா?  

ஜெபம்:

இயேசுவே, என் இனிய மீட்பரே, உம்முடைய திருமுகப் பிரகாசத்தைத் துறந்து நான் தெரிந்துகொண்ட என் வாழ்வின் இருளான பகுதிகளில் ஒளியேற்றும். தயவாக என்னை மன்னியும். உமது அன்பினாலும் இரக்கத்தினாலும் என்னை உம் மந்தையில் சேர்த்துக்கொள்ளும். 

இயேசுவின் பதில்…….

என் குழந்தாய், உன் பெலவீனத்தை நான் அறிவேன். ஆகவேதான் நீ தவறு செய்யும்போதுகூட நான் உன்னை நேசிக்கிறேன். நீ என்னைத் தேடி வரும்போது நான் மகிழுகிறேன்; உன் வாழ்வை நீ அர்ப்பணிக்கும்போது அதை நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். வழி தடுமாறும் வேளைகளில் என்னைப் பற்றிக்கொள்; நான் உன்னை வழி நடத்துவேன். 


வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள்

யோவான் நற்செய்தி நூல் 13 ஆம் அதிகாரத்தில் இருந்து தியானங்கள். எளிய நடைமுறை செய்தியும். சிறு ஜெபமும். இயேசு நம்மிடம் பேசினால் என்ன சொல்வார் என்ற ஒரு வாக்கியமும் இருக்கின்றன.

More

இந்த திட்டத்தை வழங்கிய பிஷப் ஜேம்ஸ் சீனிவாசனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://yaway.org