நான் புறம்பே தள்ளுவதில்லைமாதிரி

நான் புறம்பே தள்ளுவதில்லை

5 ல் 1 நாள்

உங்களது வார்த்தைகளை தள்ளாதவர் -இயேசு 

 

                  மனிதர்கள் மட்டும் தான் தரம் பார்த்து வார்த்தைகளை கவனிப்பர். செல்வ மிக்கவர்கள்  பேசும் வார்த்தைகளை செல்வமாக எடுத்துக் கொள்வர். தன்னை நோக்கி எளியவன் வீசும் வார்த்தைகளை எரிபந்தமாய் எடுத்து, வெள்ளமென அவன் மீது பாய்வர்.


                       ஆனால், இயேசுவோ தரம் பார்த்து மனிதர்களின் வார்த்தைகளை கவனிப்பதில்லை. அதற்கு அடையாளமாக பிறவிக் குருடனைக் காணலாம் [மத்தேயு20:31] எரிகோவின் அருகில் அமர்ந்திருந்தவன், இயேசுவின் வருகையை அறிந்து தன்னையும் மீறிக்குரல் எழுப்புகிறான். 


                      இவனிடமிருந்து  எழும்பிய குரல் அலையை அடக்க உற்றார்கள்,உறவினர்கள் முன்வந்தனர். அவதூறான வார்த்தையினால் இவனை அடக்க முயன்றனர். எவரும் கேட்க விரும்பாத இவனுடைய வார்த்தைகளை இயேசு கிறிஸ்து கேட்டு நின்றார். 


                      அதன் காரணம் எவருடைய வார்த்தைகளையும் குருடன் கவனியாமல், தன்னுடைய வார்த்தைகளை இயேசு கிறிஸ்து மட்டும் கவனிக்க வேண்டும் என்ற நிச்சயத்தினிமித்தம் இயேசு கிறிஸ்து நின்று அவனை அழைத்து அவனுடைய விசுவாசத்தினிமித்தம் அவனைக் குணமாக்கினார். 


        நீங்களும், எந்த மனிதரின் வார்த்தைகளை கவனியாமலும், உங்களின் வார்த்தைகளை புறம் தள்ளாத இயேசுவை நோக்கியே இடைவிடாது ஜெபம் பண்ணுங்கள். எந்த ஜனத்தின் மத்தியில் அவமானமடைந்தீர்களோ அதே ஜனத்தின் மத்தியில் உங்களை அழைத்து உயர்த்துவார். ஆமென் ..


வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

நான் புறம்பே தள்ளுவதில்லை

இயேசுவானவர் மட்டுமே தன்னிடத்தில் வருகிறவனை புறம்பே தள்ளுவதில்லை. தன் ஆஸ்திகள் அனைத்தையும் அழித்த கெட்டக் குமாரனை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாயிருந்தவர். உங்களை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாய் இருக்கிறார். நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. அவரையே மீண்டும் நம்பி செல்லுங்கள். உங்களை அனைவர் மத்தியிலும் மீண்டெடுப்பார்...

More

இந்த திட்டத்தை வழங்கிய கடவுளின் அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.facebook.com/kog.vlog