சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்மாதிரி

சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்

7 ல் 5 நாள்

உன் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகிறதா? 😣

இன்றும், சங்கீதம் 94:18-19 வரையுள்ள வசனங்களைப் பற்றிய சிறப்பு தியானத்தைத் நாம் தொடர்வோம்.

"என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது." (சங்கீதம் 94:18-19)

என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில்” என்ற சொற்றொடரை நாம் தியானிப்போம். சில சமயங்களில் எதிர்மறையான எண்ணங்கள் உன் மனதைத் தீவிரமாக நிரப்புகிறதா? நீ பிரச்சனையை சரிசெய்வது எப்படி என்று எல்லா வழிகளிலும் ஆய்வு செய்துவிட்டாய், ஆனால் இன்னும் ஒரு தீர்வையும் கண்டுபிடிக்க முடியவில்லையா?

ஆண்டவர் தம்முடைய பிள்ளைகளுக்கு அளிக்கும் ஒரு உறுதியான வாக்குத்தத்தம் இதோ: “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” (1 பேதுரு 5:7)

கிரேக்க மொழியில் "வைத்துவிடு" என்பதற்கு "தூக்கி எறிந்துவிடு" என்று அர்த்தமாகும். நீ எந்த நிலையில் இருந்தாலும் சரி, நீ இருக்கிற வண்ணமாகவே ஆண்டவருக்கு அருகில் வரலாம். உன் கவலைகளை மிகுந்த முயற்சியுடன் அவருடைய பாதத்திற்கு அருகில் வந்து வேதனையோடு வைத்தாலும் சரி, அவற்றை அவர் மீது வீசி எறிந்துவிட்டாலும் சரி, இதை அறிந்துகொள்: ஆண்டவரை நோக்கி நீ வீசி எறிந்தவைகளை அவர் ஏற்றுக்கொள்கிறார்! உன் கவலைகளுடன் அவரிடம் வரத் தயங்காதே, ஏனென்றால் அவர் உன்னைக் கவனித்துக்கொள்கிறார். உன் பிரச்சனைகளுக்கு அவர் ஒரு தீர்வு வைத்திருக்கிறார், அவரே எல்லாவற்றிற்கும் தீர்வாக இருக்கிறார்.

கவலையால் நிரம்பிய இதயத்திற்குப் பதிலாக, சந்தோஷமான ஒரு இதயம், மகிழ்ச்சியால் நிரம்பிய ஒரு இதயத்தை தருகிறார் : அதுதான் ஆண்டவர் உனக்கு முன்வைக்கும் பரிமாற்றம்! ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக!

இன்று, நீ இருக்கிற வண்ணமாகவே ஆண்டவரின் அருகில் வர உன்னை அழைக்கிறேன், உன் கவலைகளுடன் அவரை உண்மையாக நம்பு, கவலைக்குப் பதிலாக அவரது மகிழ்ச்சியையும் ஞானத்தையும் அவரிடம் கேள்.

நாம் சேர்ந்து ஜெபிப்போம் “ஆண்டவரே, எனக்குள் கவலைகள் பெருகுவதை நான் விரும்பவில்லை. நான் எல்லாவற்றையும் உம் மீது வைக்கிறேன். நான் அனைத்தையும் உம் பாதத்தில் வைக்கிறேன். நான் எல்லாவற்றையும் உமது கரத்தில் வைத்துவிடுகிறேன். உம்மிடமிருந்து இப்போது நான் பெறும் சமாதானம் மற்றும் அமைதிக்கு நன்றி. உமது அன்பான சமூகத்தில் என்னையும் ஆதரித்ததற்கு நன்றி. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்

மிகுந்த கவலையின்போது,​ எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் நமக்குத் தேவைப்படுகிறது. உலகத்தையே மாற்றக்கூடிய யுத்தங்களுக்கு மத்தியில் நாம் இருந்து வந்தாலும், தேவனுடைய பரிபூரண சமாதானத்துக்குள் பிரவேசிப்பது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள இந்த 7 நாள் வாசிப்புத் திட்டமானது உங்களுக்கு உதவும். மேலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆண்டவருடைய சமாதானத்தையும் நம்பிக்கையையும் பெறுவது எப்படி என்பதை பரிசுத்த ஆவியானவர் தேவ வார்த்தையிலிருந்து உங்களுக்கு வெளிப்படுத்திக் காண்பிப்பார்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=Psalm94_18_19

சம்பந்தப்பட்ட திட்டங்கள்