மனஅழுத்தம்மாதிரி

உன் கவலைகள் மீது கவனம் செலுத்த வேண்டாம்!
நாம் கவனமாக இல்லாவிட்டால், நம் மனமும் உள்ளமும் "அதிக வெப்பமடையும்" என்பது உனக்குத் தெரியுமா? எரிந்துபோகும் அபாயமின்றி தொடர் மனஅழுத்தத்தில் வாழ்வது மிகவும் ஆபத்தானது.
இன்று, உன் ஆரோக்கியத்தின் பக்கமாக உன் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். ஓய்வெடுக்கக் கற்றுக்கொள்வதுபோன்ற, உன் சரீரப்பிரகாரமான ஆரோக்கியத்தின் பக்கமாக மட்டுமல்ல... உன் ஆத்துமாவையும் சிந்தனையையும் எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது என்று பார்ப்போம். கர்த்தர் உன் வாழ்வில் இதைத்தான் விரும்புகிறார்: "பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்." (3 யோவான் 1:2)
விளையாட்டுகளில் கலந்து விளையாடுவதன் மூலமும், சரிவிகித உணவை உண்பதன் மூலமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிப்பதன் மூலமும் உன் சரீரத்தைக் கவனித்துக்கொள்வது அவசியம் என்று நீ நினைக்கலாம். இருப்பினும், உன் மனதைக் கவனித்துக்கொள்வது அதைவிட இன்றியமையாதது என்று நீ நம்புகிறாயா?
- உனக்குப் பிடித்த வேலையில் சேருவது;
- வங்கி கணக்கில் எப்போதும் அதிக பணம் வைத்திருப்பது;
- ஆரோக்கியமான, சீரான உடல் ஆகிய இவற்றை நீ விரும்பலாம்;
ஆனால், உன் மனம் எதிர்மறையானவைகளை சிந்தித்துக்கொண்டிருந்தால், நீ நிறைவான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதில் வெற்றி பெறமாட்டாய். நேர்மறையான வாழ்க்கையையும் எதிர்மறையான மனநிலையையும் நீ கொண்டிருக்க முடியாது.
உன் மனதிற்கு எதை உணவாக அளிக்கிறாய்? பொதுவாக ஒவ்வொரு நாளும், உன் வாழ்க்கையில் நீ அதிக நேர்மறையான காரியங்களை விரும்பினால், உன் எண்ணங்களை நீ சரிசெய்ய வேண்டும்.
ஒருசில எளிய ஆலோசனைகளை நான் உன்னோடு பகிர்ந்துகொள்ளலாமா?
- முதலில், உன் எண்ணங்களைக் கவனித்து அவற்றை உன் குறிப்பேட்டில் எழுது.
- உன் மனஅழுத்தங்களை சரிசெய்ய மேற்கொண்ட முயற்சியைப் போலவே, உன் ஒவ்வொரு எதிர்மறையான எண்ணத்துக்கும் அடுத்ததாக, எதிர்மறை எண்ணங்களை நேர்மறையாக மாற்றக் கூடிய ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களில் ஒன்றை எழுது.
- உன் கவலைகள் மீது கவனம் செலுத்தாமல், ஆண்டவர் மீது கவனம் செலுத்து. (பிலிப்பியர் 4:6-7)
- உன் எண்ணங்களை ஆரோக்கியமான சிந்தனைகளால் நிரப்பு. (பிலிப்பியர் 4:8)
பிறகு, இவ்வாறு ஒரு ஜெபத்தை ஏறெடு... “தகப்பனே, என் எண்ணங்களை நீர் அறிவீர்; நான் எப்போதும் அவைகளைக் கட்டுப்படுத்த முடியாது என்பது உமக்குத் தெரியும். எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் தீய எண்ணங்கள் அனைத்தையும் உமது வார்த்தையால் மாற்ற எனக்கு உதவுவீராக, ஏனென்றால், அப்படிச் செய்யும்போதுதான், நான் உமது இதயத்தை மகிழ்வித்து என் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."
நீ ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார் - ஆவிக்குரிய ரீதியிலும், மனதளவிலும், சரீரப்பிரகாரமாகவும் நீ ஆரோக்கியமாக இருக்க வேண்டும்!
இது ஒரு அற்புதமான நாளாக உனக்கு அமைவதாக!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

வாழ்க்கை என்பது ஒவ்வொரு நபரும் கிட்டத்தட்ட சகிப்புத்தன்மையுடனும் விடாமுயற்சியுடனும் போராடி மேற்கொள்ளும் ஒரு பந்தயமாகும். சில சமயங்களில், குடும்பம், திருமணம், வேலை, போன்றவற்றிற்கு நாம் ஆற்ற வேண்டிய சகலவித கடமைகளாலும் நாம் நெருக்கப்பட்டு, மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம். நம்மையும் அறியாமல், போட்டியிட்டு வெற்றி பெற செயல்பட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறோம், அதனால் ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நாம் இழக்க நேரிடலாம். இந்தத் திட்டத்தில், இப்படிப்பட்ட நெருக்கடிகளை மேற்கொண்டு, ஆண்டவர் நமக்குக் கொடுக்கும் சமாதானம் மற்றும் சந்தோஷத்தால் நிரப்பப்படுவது எப்படி என்பதை நாம் காண்போம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=HowtoresistPressure
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

தனிமையும் அமைதியும்

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு

இளைப்பாறுதலைக் காணுதல்

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்

சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்
