பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

பாகால்பிராசீம்   2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

6 ல் 2 நாள்

பெருவளர்ச்சி /தடைமுறிவு / திருப்புமுனை சம்பவங்கள் என்பது பெலவான்களுக்கல்ல, நீதிமான்களுக்கல்ல; என்னிடம் எல்லாம் சரியாக இருக்கின்றது என்பவர்களுக்கும் அல்ல; நொறுங்குண்டதும் நருங்குண்டதுமானவர்கள் – தராசு தட்டில் வைத்துப் பார்த்தால் -குறைவாக காணப்படுபவர்களுக்கே.

இயேசு -பிரவேசித்தால் எல்லாம் மாற்றமடையும்;

இயேசு ஓர் அறைக்குள் நுழைந்தவுடன் வியாதி பறந்தோட வேண்டும். பிசாசுகள் நடுங்கும்; மரித்தவர் உயிர்பெற்று எழுந்தனர்.

செங்கடலை இரண்டாக பிளக்கச் செய்த தேவன்; குருடரை பார்வையடைச்செய்தவர்; முடவர் நடக்கச்செய்த அதே தேவன் – உங்களுக்காக செயல்படப் போகிறார். இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்.

BREAKTHROUGH -என்பது தேவன் என்ன செய்கின்றார் என்பதைப் பற்றியது அல்ல; நீங்கள் என்ன பதில் அவருக்கு / அவருடைய செயல்பாட்டிற்குச் தரப் போகின்றீர்கள் என்பதைப் பற்றியது.

சமாதானத்துக்கான நினைவுகள்: நீங்கள் பாரத்தை- கீழே இறக்கி வைக்க வேண்டிய நேரம் இது. இது உங்களை நீங்கள் அர்ப்பணிக்க வேண்டிய நேரமிது. இந்த யுத்தத்தை நீங்கள் தனியாகச் செய்யவில்லை. இந்த யுத்தம் கர்த்தருடையது. அவர் யுத்தம் செய்யும் போது ஒருபோதும் தோற்பதில்லை.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

பாகால்பிராசீம்   2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

எரேமியா 29:11 ....அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. இன்றைய தேவை - சமாதானத்துக்கான நினைவுகள்; நம்பிக்கை ; சொன்னபடி நிறைவேறும் வாக்குகள் – இவை நமக்கு சர்வலோகத்தை ஆட்சி செய்யும் தேவாதி தேவனின் சர்வவல்ல கரத்தால் மட்டுமே சம்பவமாக்கித் தரமுடியும். ஏன் இந்த வலி, வேதனைகள், நோய்கள், இழப்புகள்....காரணம் : சத்துரு -அவன் எப்படிப்பட்டவன்: திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். (யோவான்:10:10) தீர்வும் இந்த 10 ஆம் வசனத்திலேயே இயேசு தருகிறார்: நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். இயேசு யார்- இன்றைக்கு எனக்கு நன்மை செய்கிறவர்; பிசாசிடம் அகப்பட்ட என்னை குணப்படுத்துகிறவர். அப்போஸ்தலர் 10:38 நமது இன்றைய சமாதானத்துக்கேதுவான நினைவுகள்: பலவருடங்களாக நமக்கு பாரமாக இருந்த பாரம் திடீரென எடுபட்டு போகும்;இருதயத்தின் ஒரு மூலையில் நாம் முணுமுணுத்துக் கொண்டிருந்த விருப்பத்திற்கு பதில் –நாம் கற்பனை செய்தும் பார்த்திராத விதத்தில் கிடைக்கும்

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d

சம்பந்தப்பட்ட திட்டங்கள்