கவலைமாதிரி

Worry

7 ல் 1 நாள்

இப்படி நடந்து விட்டால்? அப்படி நடந்து விட்டால்? இப்படிப்பட்ட கேள்விகளை நீங்கள் எப்போதாவது சமாளித்திருக்கிறீர்களா? கவலையால் கவிழ்த்தப்படுவதற்கு முதல் படி 'இப்படி நடந்து விட்டால்' என்பதற்கு இடம் கொடுப்பது தான். நீங்கள் கையாள அவசியமில்லாத காரியங்களுக்கு நீங்கள் பொறுப்பெடுப்பது தான் கவலை. பிரபஞ்சத்தின் படைப்பாளர் மீது நம்பிக்கையின்றி இருப்பது தான் கவலை. உங்களால் கையாள முடியாதவற்றை முடியும் என்று சொல்வது தான் கவலை. நீங்கள் அதிகம் கவலைப்படுகிறீர்கள் என்று கவலைப்படுகிறீர்களா? கவலைப்படுவதால் நீங்கள் கவலையை முறியடிக்க முடியாது. உங்கள் சூழ்நிலையைப் பற்றி ஏதாவது செய்ய முடிந்த ஒருவரிடம் உங்கள் பிரச்சனைகளை திசை திருப்புவதன் மூலம் உங்கள் கவலைகளை முறியடிக்க முடியும். நீங்கள் கையாள வேண்டிய காரியங்களுக்கு நீங்கள் பொறுப்பெடுக்கக் கூடாது என்பது அர்த்தம் இல்லை. உங்கள் பொறுப்பு எங்கே முடிகிறது என்றும் தேவனுடயவை எங்கே துவங்குகிறது என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்பது தான் அர்த்தம். அதனைப் பற்றி தேவையான அளவு தெரியவில்லையே என்று கவலைப்படுகிறீர்களா? வேதாகமம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்!

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Worry

அறியாதவற்றை பற்றிய கவலையாலும் பயத்தாலும் நம் வாழ்க்கை எளிதாக நிரம்பி விடலாம். ஆனால் தேவன் நமக்கு பயம் மற்றும் கவலையின் ஆவியை கொடாமல், தைரியத்தின் ஆவியை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவனிடம் நீங்கள் திரும்ப இந்த ஏழு நாள் திட்டம் உங்களுக்கு உதவும். கவலைக்கு தீர்வான முடிவு தேவனிடம் உங்கள் நம்பிக்கையை வைப்பது தான்.

More

We would like to thank Life.Church for providing this plan. For more information, please visit: www.life.church