பயத்தை மேற்கொள்ளுதல்மாதிரி

பயத்தை மேற்கொள்ளுதல்

5 ல் 4 நாள்

பயத்தை மேற்கொள்ளுதல் - இருதயத்தில் காணப்படும் விக்கிரகங்களோடு இடைபடுதல்.

ஒரு விளையாட்டு வீரனாக, என்னுடைய செயல்திறமைகளையும், என்னுடைய வெற்றியின் அடிப்படையில் நான் மதிப்பீடு செய்யப்படுகிறேன். இந்த தருணத்தில் நான் கவனமாக இருக்க வேண்டியது என்னவென்றால், என்னுடைய செயல்திறமைகளை நான் ஒருக்காலும் விக்கிரகமாக எண்ணிவிடக்கூடாது. நம்முடைய மதிப்பானது, நம் செயல்திறனால் முடிவெடுக்கப்படும்போது, அங்கு நம் சுயமானது காயப்படுகிறது, எனவே நான் அதை ஒரு விக்கிரகமாக அழைக்கிறேன். ஒரு கிறிஸ்தவன் என்ற நிலையில், இதை ஒரு கற்றுக்கொள்வதற்கான முக்கிய பாடமாக கருதுகிறேன். நான் வெற்றிப்பெற வேண்டுமென்கிற சில இலக்குகளை நான் வைத்திருப்பதினால், இது எளிதானதல்ல. 

ஆனால், நான் புரிந்துகொண்ட காரியம் என்னவெனில், வெற்றிபெறுவதில் மாத்திரமே எல்லாம் அடங்கிவிடாது. வெற்றிபெறுபவது நல்லதுதான். வெற்றிபெற நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய முடியும், ஆனால் அதில் மாத்திரமே நம்முடைய கவனத்தை செலுத்தும்போது, அதுவே விக்கிரகமாக அமைந்துவிடும். இந்த விக்கிரகங்களை அடையாளங்கண்டு கொண்ட சமயத்தில், அதை நாம் எவ்வாறு சமநிலைப் படுத்தப்போகிறோம்? சரி, நாம் முடிந்த அளவு எல்லாவித பிரயாசத்தில் கடினமாக உழைக்க வேண்டும். அதன்பிறகு, அந்த உழைப்பையும், பிரயாசத்தையும் தேவன் பொறுப்பெடுத்துக்கொள்ள நாம் அவரை அனுமதிக்க வேண்டும்.

உன் கையின் பிரயாசத்தை ஆசீர்வதிப்பேன் என்று வாக்கு கொடுத்தவர், உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை என்றும் வாக்கு பண்ணியிருக்கிறார். எனவே, நாம் செய்யும் அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்து, அவரே நம்மை வழிநடத்தும்படிக்கு அனுமதிக்க வேண்டும்.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

பயத்தை மேற்கொள்ளுதல்

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஜெ.பி.டுமினி, பயத்தை எதிர்கொண்டு மேற்கொள்ளுதல் பற்றிய தன் தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுகிறார். நாம் அவருக்கு பயப்படும் பயத்தை உறுதிப்படுத்துவதற்காக, நம்முடைய உண்மையான மதிப்பையும் தகுதியையும் புரிந்துகொண்டு, சர்வ வல்லமை பொருந்திய சிருஷ்டிகராகிய தேவனை நோக்கிப் பார்ப்பதின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

More

இந்த திட்டத்தை வழங்கிய JP Duminy க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://jp21foundation.org/