நேசம்மாதிரி

நேசம்

5 ல் 1 நாள்

என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே. உன்னதப்பாட்டு 2:4 இவள் என்னுடையவள்,எனக்குமாத்திரம் சொந்தம் என்றுசொல்லி நம் மேல் அவருடைய கல்வாரிக் கொடியை நாட்டி சொல்லி விட்டார்.

இவள் என்னுடைய நேசம் என்றுஉலகத்திற்கு அறிவித்து விட்டார்.நான் உலக அன்பிற்காகஓடி ஓடி அலைந்துக் கொண்டிருந்தேன் .ஓடிக் கொண்டிருந்த என்னை தேடி வந்த நேசர் இவர்.

உலகத்தில் எல்லா அன்புகளும் சுயத்திற்காக மாத்திரமே என்னைபயன்படுத்திக் கொ‌ண்டது. தன்னுடைய தேவைகள் முடிந்த பின் நான் அவர்களுக்கு தேவை இல்லை என்ற நிலை வந்த போது என்னை உதறி விட்டார்கள்.

ஆனால் எனக்காகவே தன்னுடைய இரத்தத்தை சிந்தி, இரத்தத்தை விலைக் கொடுத்து என்னை வாங்கிக்கொண்டவர் என் நேசர்.

நான் வழி மாறும் போதுஇந்த பாதை அழிவின் பாதை என்று என் புத்தியைத் தெளியப்பண்ணி ,கல்வாரிக்குக் கொண்டு வந்து அவருடைய நேச அன்பை அவருடைய வேதத்தின் வெளிச்சத்தில் எனக்குக் காண்பித்து அவரிடத்தில் என்னை முற்றிலும் ஒப்புக்கொடுக்க வைத்தது அவருடைய இரக்கமே !

அவருடைய அன்புக்கு அளவில்லை , அவருடைய காருண்யத்துக்கு முடிவே இல்லை.அவரே என் நேசர் அவர் என்னுடையவர் .

அவருக்காகவே முழு வாழ்க்கையும் அர்ப்பணித்து வாழ எனக்கு உதவி செய்தவர்.இயேசுவுக்கே புகழ்!!

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

நேசம்

நம்முடைய ஆத்தும மணவாளனாகிய நேசருடைய நேசத்தைக் குறித்து பார்க்கிறோம். கர்த்தருடைய நேசம்,அவருடைய நாமம்,கர்த்தருடைய சத்தம், நம்முடைய ஆத்தும நேசர் மற்ற நேசரைப் பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்தவர் என்று வாசிக்கப்போகிறோம். நேசத்துக்காகவே மணவாட்டியாகிய சபையானது கிறிஸ்து என்னும் மணவாளனுக்கு காத்திருக்கிறது. என்பதை இந்த 5 நாள் திட்டங்களில் வாசிக்க போகிறோம்

More

https://indiarevivalministries.org/