நேசம்மாதிரி

நேசம்

5 ல் 2 நாள்

இன்பமானது!!

திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது. உன்னதப்பாட்டு 1:2

இயேசு கிறிஸ்து என்னைசந்தித்த உடனே நான் ருசிக்க ஆரம்பித்து விட்டேன்.அவருடைய நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது.

மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்; அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும். நீதிமொழிகள் 31:6 - 7 என்ற வேத சாஸ்திரத்தின்படி திராட்சைரசமாகிய அவருடைய நேசத்தை பருக,பருக நான் என் குறைகளை மறந்தேவிட்டேன்.

மற்றவர்கள் என்னை நேசிக்க வில்லை என்கிற குறையை மறந்துபோனேன். மற்றவர்கள் என்னை உதாசினப்படுத்துகிறார்கள்என்கிற குறையை மறந்தேபோனேன். இந்த உலகம் என்னை குறித்து சொன்ன எல்லாவிதமான விமர்சனங்களையும் மறந்தேபோனேன்.

என்னுடைய எல்லா வகையான வருத்தங்களையும் அப்புறம் நினைக்கவில்லை. ஏனென்றால் அதை எல்லாம் நினைக்க எனக்கு நேரமே இல்லை. என் நேசரை நான் எப்படி திருப்தி படுத்தட்டும் என்ற நினைவு மாத்திரமே என்னில் மேலோங்கி இருந்தது. எனக்காய் இரத்தம் சிந்தி என்னை விலைக்கு வாங்கியவர்க்கே நான் முற்றிலும் அடிமை.அவருடைய நேச அன்புக்கு நூற்றுக்கு நூறு என்னைஅர்ப்பணித்து விட்டேன்.

சுயமாக சிந்திக்க முடியவில்லை. கிறிஸ்துவின் சிந்தையே என்னில் மேலோங்கி இருக்கிறது.ஆகவே என் நேசர் எனக்கு கொடுத்த நேசம் திராட்சைரசத்திலும் பார்க்கிலும் மேலானது.அந்த நேசித்தில் முழ்கி ஊறிப்போனேன்.நான் என்னுடைய சுயத்தை இழந்து விட்டேன். நான் என்நேசருக்கு சொந்தம்

அவரே என்னை நடத்துகிறார்!!

ஆமென் ஆமென்!!

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

நேசம்

நம்முடைய ஆத்தும மணவாளனாகிய நேசருடைய நேசத்தைக் குறித்து பார்க்கிறோம். கர்த்தருடைய நேசம்,அவருடைய நாமம்,கர்த்தருடைய சத்தம், நம்முடைய ஆத்தும நேசர் மற்ற நேசரைப் பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்தவர் என்று வாசிக்கப்போகிறோம். நேசத்துக்காகவே மணவாட்டியாகிய சபையானது கிறிஸ்து என்னும் மணவாளனுக்கு காத்திருக்கிறது. என்பதை இந்த 5 நாள் திட்டங்களில் வாசிக்க போகிறோம்

More

https://indiarevivalministries.org/