கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்மாதிரி

மாற்றம்
பயம் விசுவாசத்தை சந்திக்கும்போது
“காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான்.” முக்கியமான இந்தத் தருணம், பயத்தையும் விசுவாசத்தையும் பற்றிய ஆழமான ஒன்றை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. காற்று திடீரென அந்த நேரத்தில் பலமாக அடிக்கவில்லை. ஆனால், பேதுரு இயேசுவை விட காற்றின் மீது அதிக கவனம் செலுத்தினார் என்பதுதான் உண்மை.
மூல உரையில் “கண்டு”, என்னும் பதம் வெறுமனே பார்ப்பதை விட மேலான ஒன்றைக் குறிக்கிறது; அது, பேதுரு காற்றைக் கருத்தில் கொள்ளவும், அதைப் பற்றி யோசிக்கவும், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவும் தொடங்கினார் என்பதாகும். அவருடைய கவனத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் உடனடி விளைவுகளை ஏற்படுத்தியது: பயத்திற்கு பதில் விசுவாசம் வந்தது, மூழ்குவது நடப்பதாக மாறியது.
ஆனால், பேதுரு மூழ்கியதிலும் ஒரு அழகு உண்டு. “ஆண்டவரே, என்னை இரட்சியும்” என்பது மூன்றே வார்த்தைகள்தான் (கிரேக்கத்தில் இன்னும் குறுகியது) என்றாலும், பிரச்சனையான நேரத்தில் எங்கு திரும்ப வேண்டும் என பேதுரு அறிந்திருந்தார் என்பதை அது வெளிப்படுத்துகிறது. உதவியற்ற தருணங்களில் ஜெபிக்க, பெரிய வார்த்தைகள் ஒன்றும் தேவையில்லை, இயேசுவிடம் உண்மையாகத் திரும்பும் இருதயம் மட்டும் போதும் என்பதை அவருடைய இந்தச் சுருக்கமான ஜெபம் நமக்கு நினைவுறுத்துகிறது.
ஜெபக்குறிப்புகள்:
உங்களைப் போக விடமால் பிடித்து வைத்திருக்கும் பயங்கள் யாவை?
மூழ்கத் தொடங்கும்போது, எவ்வளவு சீக்கிரம் இயேசுவை நோக்கிக் கதறுகிறீர்கள்?
பயமான நேரங்களில் உங்கள் விசுவாசத்தை பலப்படுத்துமாறு தேவனிடம் கேளுங்கள்.
மூழ்கத் தொடங்கும் தருணத்தை அறிந்துகொள்ள உதவுமாறு ஜெபியுங்கள்.
செய்முறைப் பயிற்சி:
பயம் – விசுவாசம் :
1.இரண்டு பிரிவுகளை உண்டாக்கவும்:
பயம் பிரிவு: உங்களது தற்போதைய பயங்களைக் குறிப்பிடுக.
விசுவாசம் பிரிவு: ஒவ்வொரு பயத்திற்கும் எதிரான சத்தியத்தை தேவனுடைய வார்த்தையிலிருந்து எடுத்து எழுதுக.
2.நாள் முழுதும் பார்க்கக் கூடிய ஒரு இடத்தில் இந்தப் பட்டியலை வைக்கவும்.
சிந்தனைக்கான கேள்விகள்:
இயேசு பேதுருவை மீட்கும் முன்னர் அவனைச் சற்று மூழ்க அனுமதித்தது ஏன்?
பேதுருவின் கூப்பிடுதலுக்கு இயேசு பதிலளித்த வேகத்திலிருந்து நாம் அறிந்துகொள்வது என்ன?
தேவன் உங்களுடைய கடந்தகால பயங்களை உங்கள் விசுவாசத்தை பலப்படுத்துவதற்காக எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்?
இந்த திட்டத்தைப் பற்றி

“கட்டளையிடும்!” பொங்கி எழுந்த கடலலைகள் மத்தியில், புயலில் சிக்கி அலைமோதிய படகிலிருந்து இறங்கிய பேதுருவின் வாழ்க்கையை மாற்றியது இந்த வார்த்தை. படகிலிருந்து இயேசு இருக்கும் இடத்தை நோக்கிச் சென்ற அவரது பயணம், விசுவாசம், கவனம் மற்றும் மாற்றத்தைப் பற்றிய காலத்திற்கு அப்பாற்பட்ட சத்தியங்களை வெளிப்படுத்துகிறது. இயேசுவின் அழைப்பை அறிதல், விசுவாசத்தினால் பயத்தை மேற்கொள்ளுதல் மற்றும் அசையாமல் அவரையே நோக்கிப் பார்த்தல் ஆகிய காரியங்களில் உங்களை வழிநடத்தும்படி இந்த 4-நாள் தியானம் மத்தேயு 14:28-33 வசனங்களின்படி அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் படகின் விளிம்பில் இருந்தாலும், தண்ணீர் மேல் நடக்கக் கற்றுக்கொண்டிருந்தாலும், சாதாரண விசுவாசிகள் “கட்டளையிடும்” என்று தைரியமாகச் சொல்லும்போது என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Zero க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.zeroconferences.com/india