கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்மாதிரி

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

4 ல் 4 நாள்

தொடர்ந்து நடந்து செல்லுங்கள்

முதல் அடியைத் தாண்டி

இந்தச் சம்பவத்தின் முடிவு அதன் மையப்பகுதியைப் போலவே தத்ரூபமானது. “அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.
அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.” இந்த முடிவு தொடரும் விசுவாசத்தைப் பற்றிய பல முக்கிய சத்தியங்களை வெளிப்படுத்துகிறது.

முதலாவது, அவர்கள் படகில் ஏறும் வரை புயல் அமரவில்லை என்பதைக் கவனியுங்கள். சில சமயங்களில், தேவன் புயலை அமர்த்துகிறார்; மற்றும் சில சமயங்களில் நம்மை அதன் வழியாகக் கடந்து போகச் செய்கிறார். இரண்டுமே அற்புதம்தான். இரண்டுமே அவருடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன.

இரண்டாவது, இந்த அனுபவம் பேதுருவை மட்டுமல்ல, படகில் இருந்த எல்லோரையும் மாற்றியது. உங்கள் விசுவாச வாழ்க்கை உங்களைப் பற்றியது மட்டுமல்ல. மாறாக, உங்கள் பயணத்தைக் கவனித்து, உங்கள் வெற்றி தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்பவர்களையும் பற்றிய ஒன்று.

ஜெபக்குறிப்புகள்:

உங்கள் விசுவாச வாழ்க்கை எப்படி இயேசுவைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை மாற்றியிருக்கிறது?

உங்கள் விசுவாச வாழ்க்கையைக் கவனிக்கக் கூடியவர்கள் யார்?

அவ்வப்போதைய அற்புத தருணங்களுக்காக மட்டுமல்ல, எப்போதும் மாறாத விசுவாசம் கொண்டிருக்க உதவுமாறு தேவனிடம் கேளுங்கள்.

உங்கள் சாட்சியினால் உத்வேகம் அடைகிறவர்களுக்காக ஜெபியுங்கள்.

செய்முறைப் பயிற்சி:

விசுவாசப் பாரம்பரியம் – எழுத நேரமெடுக்கவும்:

இதுவரை நீங்கள் விசுவாசத்தில் செய்த மிகப்பெரிய முயற்சி

ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள்

இந்த அனுபவங்கள் எப்படி தேவனைக் குறித்த உங்கள் கண்ணோட்டத்தை வடிவமைத்தன

உங்கள் விசுவாசப் பயணத்தினால் உத்வேகம் பெற்றவர்கள் யார்

தேவன் உங்களை அழைக்கும் அடுத்த நிலைகள் யாவை

சிந்தனைக்கான கேள்விகள்:

இந்த அனுபவம் எப்படி இயேசுவைப் பற்றிய சீஷர்களின் கண்ணோட்டத்தை மாற்றியது?

நம் விசுவாசப் பயணத்தைக் காப்பதில் ஆராதனையின் பங்கு என்ன?

மற்றவர்களின் விசுவாசத்தை உற்சாகப்படுத்த உங்கள் அனுபவத்தை எப்படிப் பயன்படுத்தலாம்?

இந்த திட்டத்தைப் பற்றி

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

“கட்டளையிடும்!” பொங்கி எழுந்த கடலலைகள் மத்தியில், புயலில் சிக்கி அலைமோதிய படகிலிருந்து இறங்கிய பேதுருவின் வாழ்க்கையை மாற்றியது இந்த வார்த்தை. படகிலிருந்து இயேசு இருக்கும் இடத்தை நோக்கிச் சென்ற அவரது பயணம், விசுவாசம், கவனம் மற்றும் மாற்றத்தைப் பற்றிய காலத்திற்கு அப்பாற்பட்ட சத்தியங்களை வெளிப்படுத்துகிறது. இயேசுவின் அழைப்பை அறிதல், விசுவாசத்தினால் பயத்தை மேற்கொள்ளுதல் மற்றும் அசையாமல் அவரையே நோக்கிப் பார்த்தல் ஆகிய காரியங்களில் உங்களை வழிநடத்தும்படி இந்த 4-நாள் தியானம் மத்தேயு 14:28-33 வசனங்களின்படி அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் படகின் விளிம்பில் இருந்தாலும், தண்ணீர் மேல் நடக்கக் கற்றுக்கொண்டிருந்தாலும், சாதாரண விசுவாசிகள் “கட்டளையிடும்” என்று தைரியமாகச் சொல்லும்போது என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Zero க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.zeroconferences.com/india

சம்பந்தப்பட்ட திட்டங்கள்