அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

அதி-காலைஜெபத்துடன் ஆரம்பிக்கும் போது – என்ன நன்மைகள் என்று பார்ப்போமா?
1.நாம் நம்மை தேவனுடைய சித்தத்துடன் (விருப்பத்துடன்) நம்மை நாமே வரிசைப்படுத்துகிறோம்.
2.தேவாதி தேவனுடன் எப்பொழுதும்-தொடர்பில் இருப்பதுதான் ஒருவரின் ”ஆவி” எனப்படுகிறது. தேவனோடு இருக்கும் உறவில் உணர்வுள்ளவர்களாக இருந்து – அந்த நாளில் செய்யும் செயல்களில் பிசாசானவன் தனது திட்டங்களால் இடைமறிக்க விடாமல் - ஓர் ஆவிக்குரிய மூடுதலைப் பெற்று அந்த நாளை ஆரம்பிக்கிறோம்.
3.லூக்கா 10:19 ல் ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது என்ற உத்திரவாதத்துடன் இயேசு நமக்கு”.....சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும்- அதிகாரம் கொடுத்திருக்கிறார்; இந்த அதிகாரத்தை நாம் அதி-காலையிலேயே எடுத்துக்கொள்ளும் போது - அந்த நாள் முழுவதும் நாம் ஆட்சி செய்வோம். WE SHALL CONQUER – WE SHALL BE VICTORS OR VICTIMS.
4.காலையில் தைரியமாக தேவனுடைய வார்த்தையை / வாக்குதத்தத்தை - அறிக்கைசெய்யும் போது நீதிமொழிகள் 18:21 ல் நாம் காண்பது போல -- ... ஜீவனை நம்து நாவின் அதிகாரத்திற்குள் கொண்டு வருகிறோம். இன்றைய நாள் ஓர் ஆசீர்வாதமான நாள், நான் ஜீவாதிபதியுடன் ஜீவிக்கும் நாள், நான் காரிய சித்தியோடு ஜீவிக்கும் நாள் இந்த நல்ல நாள் என்று அறிக்கை செய்யும் போது அந்த நாளில் சூழ்நிலைகளில் தேவனுடைய வல்லமையை உட்புகுத்துகிறோம். நம்முடைய விசுவாசத்தை செயல்படுத்துகிறோம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

அதிகாலை - உலகம் தூங்கி கொண்டிருக்கும்; தெருக்கள் அமைதியாக இருக்கும் - இருட்டான வேளை ஒரு விசேஷமான நேரம். பரலோகம் நெருக்கமாகநின்று உங்கள் ஜெபத்தை செவிகொடுத்துகேட்கும் நேரம். நீங்கள் அதிகாலையில் எழுந்து ஜெபிக்கும் போது உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் சம்வங்கள் நடக்கும். நீங்கள் எனக்கு வழிதெரியவில்லை என்ற நான்கு வழி சந்திப்பில் நிறிகிறீர்களா? ஜெபவேளையில் - தேவன் தாம் பேசும் வார்த்தைகளை நீங்கள் எளிதில்புரிந்து கொள்வீர்கள்; அது வார்த்தைகளாக கூட இராது; தேவன் தரும் ஓர் அமைதியாக - "எனக்காக தேவன் யாவற்றையும் செய்து முடிப்பார்" என்ற நிச்சயம் தரும் வேளையாகவும் - அது இருக்கலாம். உலகை இருள் சூழ்ந்திருக்கும் - அமைதியான - அதிகாலை நேரத்தில் - தேவன் நமக்குள் தரும் வெளிச்சமும் அதிகரிக்கும். ஏனென்றால் தேவன் - நாம் நியமித்திருக்கும் – கடிகாரம் காட்டும் காலங்களுக்கு அப்பாற்பட்டவர். தேவ மைந்தன் இயேசுவே நமக்கு நல்ல முன்மாதிரி; இன்றைய வேதபகுதி மாற்கு 1:35 ஐ உங்கள் வேதாகமத்தில் எடுத்து வாசியுங்கள்- புரியும்.....
More
இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d