தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்மாதிரி

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

30 ல் 8 நாள்

என் நண்பன் எவ்வாறு 2(!!) விமானங்களை தவறவிட்டான் 😬

நீங்கள் எப்போதாவது காத்துக்கொண்டிருக்கையில் தூங்குவதுண்டா?

எங்கள் குழு உறுப்பினர்களில் ஒருவர் (நான் பெயர் சொல்ல மாட்டேன்🤪) மிகவும் மோசமான நேரங்களில் தூங்கிவிடும் பழக்கம் கொண்டவர். ஒருமுறை, அவர் விமான நிலையத்தில் காத்திருந்தபோது தூங்கிவிட்டார், அதனால் அவரது விமானத்தைத் தவறவிட்டார்! அவர் சேவை மையத்திற்குச் சென்று, தனது இக்கட்டான நிலையை விளக்கிய பிறகு, அவருக்கு மீண்டும் ஒரு டிக்கெட் பதிவு செய்யப்பட்டது; இருப்பினும், அடுத்த விமானம் பல மணி நேரம் கழித்துதான் இருந்தது. அன்று தனது இரண்டாவது விமானத்தையும் தவறவிடக்கூடாது என்று உறுதியாக இருந்த அவர், விழித்திருக்க முயற்சித்தார் - ஆனால் நீண்ட நேரம் காத்திருந்ததால் களைப்பு அவரை ஆட்கொண்டது… நீங்கள் யூகித்தது சரிதான்; அவர் இரண்டாவது விமானத்தையும் தவறவிட்டார் 🤦🏻‍♂️.

இது மத்தேயு 25-ல் (TAOVBSI) உள்ள இயேசுவின் பத்து கன்னிகைகளின் உவமையை எனக்கு நினைவூட்டுகிறது.

அவர்கள் அனைவரும் ஒரு திருமண விருந்தின் அங்கமாக இருந்தனர், மேலும் மணமகன் வரும் வரை காத்திருக்க வேண்டியவர்களாய் இருந்தனர். ஆனால் அவர் தாமதமானபோது, அவர்கள் அனைவரும் காத்திருக்கும்போதே தூங்கிவிட்டனர். மணமகன் இறுதியாக வந்தபோது, அவர்கள் எழுந்தனர், ஆனால் தங்கள் விளக்குகளுக்கு கூடுதல் எண்ணெய் கொண்டு வந்த ஐந்து புத்திசாலித்தனமான கன்னிகைகள் மட்டுமே திருமணத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். எண்ணெய் இல்லாததால் விளக்குகள் அணைந்துபோன புத்தியில்லாதவர்கள் வாய்ப்பை இழந்தனர்.

இயேசுவே நம் மணமகன், அவர் திரும்பி வரவிருக்கிறார்! அவர் வரும்போது நாம் தயாராக இருக்க வேண்டும் (எபேசியர் 5:25-33, TAOVBSI மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் 19:7-8, TAOVBSI).

இந்த வாரம், நாம் ஒருபோதும் எண்ணெய் தீர்ந்துபோகாமல் இருப்பதை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வது என்று ஒன்றாக ஆராய்வோம். ஆனால் இப்போதைக்கு, இயேசுவின் பார்வையில் நீங்கள் ஒரு அழகான, குறைபாடற்ற மற்றும் குற்றமற்ற கன்னிகை போன்றவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அப்படி உணரவில்லையென்றாலும், சிலுவையில் கிறிஸ்துவின் நிறைவான செயலால் நீங்கள் குற்றமற்றவர்களாக்கப்பட்டிருக்கிறீர்கள், மேலும் அவருக்காகக் காத்திருக்க நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். (1 தெசலோனிக்கேயர் 5:23-24 TAOVBSI மற்றும் ரோமர் 8:1-4 TAOVBSI)

நாம் ஒன்றாக ஜெபிப்போம்:

பரலோக பிதாவே, உம்முடைய கண்களில் நான் ஒரு தூய்மையான மற்றும் குற்றமற்ற கன்னிகையாக இருப்பதற்காக உமக்கு நன்றி. என் வாழ்க்கையில் நீர் விரும்பும் எண்ணெயை வளர்க்கவும் சேமிக்கவும் எனக்குக் கற்றுக்கொடும், மேலும் உமக்காகக் காத்திருக்க எனக்கு உதவி செய்யும்.

நீங்கள் ஒரு அதிசயம்!

Cameron Mendes

இந்த திட்டத்தைப் பற்றி

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

இயேசு கிறிஸ்து பெரும்பாலும் போதிப்பதற்கு உவமைகளையே பயன்படுத்தினார். அதற்குக் காரணம் உண்டு: இந்த எளிய, ஆனால் ஆழமான கதைகள், ஆழ்ந்த ஆவிக்குரிய உண்மைகளையும், என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைப் பாடங்களையும், அவருடைய சீடர்கள் மற்றும் பொது மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருந்தன. இந்தக் கதைகள் சொல்லப்பட்ட வரலாற்று மற்றும் கலாச்சாரப் பின்னணியை நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது —அதை முதலில் கேட்டவர்களுக்கு அவை எந்தப் பொருளை உணர்த்தியதோ, அதே வகையில் நாமும் அதை புரிந்து உணர்ந்துகொள்ள நமக்கு உதவும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net