என் ஆலயத்தில் உணவு இருக்கும்படியாக, உங்கள் பத்தில் ஒரு பங்கு முழுவதையும் களஞ்சியத்துக்குக் கொண்டுவாருங்கள். இவ்வாறு என்னைச் சோதித்துப் பாருங்கள் என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார். நீங்கள் இவ்வாறு செய்யும்போது, நான் வானத்தின் மதகுகளைத் திறந்து, நிறைந்து வழியும்படி இடங்கொள்ளாத அளவு அதிக ஆசீர்வாதங்களை உங்கள்மீது பொழிய மாட்டேனோ என்று பாருங்கள்.