1
நீதிமொழி 16:3
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
உன் செயல்களையெல்லாம் யெகோவாவுக்கு ஒப்புக்கொடு, அப்பொழுது அவர் உனது திட்டங்களை உறுதிப்படுத்துவார்.
ஒப்பீடு
நீதிமொழி 16:3 ஆராயுங்கள்
2
நீதிமொழி 16:9
மனிதர் தம் வழியை இருதயத்தில் திட்டமிடுகிறார்கள்; ஆனால் அவர்களுடைய காலடிகளை யெகோவாவே தீர்மானிக்கிறார்.
நீதிமொழி 16:9 ஆராயுங்கள்
3
நீதிமொழி 16:24
கருணையான வார்த்தைகள் தேன்கூட்டைப்போல் ஆத்துமாவுக்கு இனிமையாயும், எலும்புகளுக்கு சுகமாயுமிருக்கும்.
நீதிமொழி 16:24 ஆராயுங்கள்
4
நீதிமொழி 16:1
இருதயத்தின் திட்டங்கள் மனிதனுடையவை, ஆனால் யெகோவா அவர்களுடைய நாவுகளில் சரியான பதிலைத் தருகிறார்.
நீதிமொழி 16:1 ஆராயுங்கள்
5
நீதிமொழி 16:32
பொறுமையுள்ளவன் ஒரு போர்வீரனைவிட சிறந்தவன்; தன் கோபத்தை அடக்குகிறவன் ஒரு பட்டணத்தைக் கைப்பற்றுகிறவனைவிடச் சிறந்தவன்.
நீதிமொழி 16:32 ஆராயுங்கள்
6
நீதிமொழி 16:18
அழிவுக்கு முன்னால் அகந்தை வருகிறது; வீழ்ச்சிக்கு முன்னால் மனமேட்டிமை வருகிறது.
நீதிமொழி 16:18 ஆராயுங்கள்
7
நீதிமொழி 16:2
மனிதர்களுடைய வழிகளெல்லாம் அவர்கள் பார்வைக்கு சுத்தமானதாய் காணப்படும், ஆனால் யெகோவா உள்நோக்கங்களை ஆராய்ந்து பார்க்கிறார்.
நீதிமொழி 16:2 ஆராயுங்கள்
8
நீதிமொழி 16:20
அறிவுரைகளை ஏற்றுக்கொள்பவர்கள் வாழ்வடைவார்கள், யெகோவாவிடம் நம்பிக்கையாயிருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
நீதிமொழி 16:20 ஆராயுங்கள்
9
நீதிமொழி 16:8
அநியாயமாய்ப் பெறும் அதிக இலாபத்தைவிட, நீதியாய்ப் பெறும் கொஞ்சமே சிறந்தது.
நீதிமொழி 16:8 ஆராயுங்கள்
10
நீதிமொழி 16:25
மனிதனுக்கு சரியெனத் தோன்றும் வழி ஒன்று உண்டு; முடிவில் அது மரணத்திற்கே வழிநடத்தும்.
நீதிமொழி 16:25 ஆராயுங்கள்
11
நீதிமொழி 16:28
வஞ்சகர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள், கோள் சொல்கிறவர்கள் நெருங்கிய நண்பர்களையும் பிரித்துவிடுகிறார்கள்.
நீதிமொழி 16:28 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்