புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17  - சகோதரன் சித்தார்த்தன்

3 ல் 1 நாள்

பாவம் என்றால் “missing the mark” என ஆங்கிலத்திலும், தமிழில்- குறி தவறும் அம்பு;வழி தப்பிப்போன ஆடு, காணாமல் போன வெள்ளிக்காசு; தேவனோடு உள்ள உறவிலிருந்து பிரிந்ததினால்-ஆவியில் மரித்தவாழ்க்கை என்றும் அர்த்தம்.

Man is Spiritual Being in a Physical Body...மனிதன் (இது மனுஷியையும் உள்ளடக்கும்) ஆவி , ஆத்துமா மற்றும் சரீத்தினால் ஆனவன். அவன் ஆவிக்குரியவன் – சரீரம் என்னும் மட்பாண்டத்தில் அந்த ஆவி , ஆத்துமாவைப் பெற்றிருக்கிறான். ஆவிக்குரியவன் என்றால் அவன் தொடர்ச்சியாக தன்னைப்படைத்த தேவனோடு உறவிலே இருக்க வேண்டும். இது தான் அவனது ஜீவன்.

ஏதேன் தோட்டத்தில் பாவம் பிரவேசித்தபோது மனுஷன் சரீரபிரகாரமாக மரிக்கவில்லை; ஆனால், அவனது ஆவி தேவனோடு கொண்டிருந்த உறவை இழந்தது. இதுதான் மனுஷனுடைய அவலநிலை (பாவம்). இந்நிலையிலிருந்து மனுஷனை இரட்சிக்க (காப்பாற்ற) இயேசு உலகத்தில் வந்தார். அவரே தேவனுடன் ஆன நமது உறவை புதுப்பிக்க வழி, சத்தியம், ஜீவன் (யோவான் 14:6).

1தீமோத்தேயு 1:15 வசன தியானத்தில் தேவனுடன் ஆன நமது இழந்து போன உறவை புதுப்பித்துதர- இயேசு உலகத்தில் வந்தார் என்ற வார்த்தை - உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமானது. சவுல்ஆக இருந்து பவுல் ஆன நான் – ”தேவனோடு இருக்கும் உறவை இழந்து நின்றதில் பிரதானமானவன்” என்கிறார்.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17  - சகோதரன் சித்தார்த்தன்

பாவம் (SIN) -என்பதன் அர்த்தம் - குறி தவறும் அம்பு; வழி தப்பிப்போன ஆடு, காணாமல் போன வெள்ளிக்காசு; (மரித்த -தேவனோடு உள்ள உறவிலிருந்து பிரிந்த) வாழ்க்கை. இயேசு - பாவிகளை ஏற்றுக்கொள்கிறார்; அவர்களோடு சாப்பிடுகிறார் (ஐக்கியப்படுகிறார்) – என்பதே இங்கே அவரைக்குறித்து முறுமுறுக்கப்பட்ட வார்த்தைகள். சர்வலோகமும் அதுவாக தானாக தோன்றவில்லை. சிருஷ்டிப்பு என்று ஒன்று இருக்குமானால் சிருஷ்டிகர் என்று ஒருவர் இருக்கத்தான் வேண்டும். இயேசு யார்? யோவான் 1:18 நமக்கு கற்றுத்தருவது :பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரன் – தேவனை வெளிப்படுத்தினார். சர்வலோகத்தையும் சிருஷ்டித்தவர்– தேவன் -அவரை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய மடியிலிருக்கிற குமாரன் – இயேசு கிறிஸ்துவை அறிந்து கொண்டால் போதும் இயேசுவே தேவனுடைய ஒரேபேறான குமாரன். இயேசு – வழிதப்பிப்போனவர்களை ஏற்றுக்கொள்வது தேவனுடைய சுபாவத்தை நமக்கு காட்டுகிறது. நாம் புத்திதெளிந்து - மனம்திரும்பி வரும் போது - நம்மைஅவருடைய பிள்ளைகள்- CHILDREN என்றே அழைக்கிறார் - வேலைக்காரன் என்று அல்ல என்பதே இந்தத் தொடர்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d