1
நீதிமொழிகள் 16:3
பரிசுத்த பைபிள்
நீ செய்கிற அனைத்து செயல்களுக்கும் கர்த்தரிடம் உதவிக்கு அணுகினால் நீ வெற்றி அடைவாய்.
ஒப்பீடு
நீதிமொழிகள் 16:3 ஆராயுங்கள்
2
நீதிமொழிகள் 16:9
ஒருவன் தான் விரும்புகிறபடியெல்லாம் செய்வதற்குத் திட்டமிடலாம். ஆனால் எது நடக்க வேண்டுமென முடிவு செய்பவர் கர்த்தரே.
நீதிமொழிகள் 16:9 ஆராயுங்கள்
3
நீதிமொழிகள் 16:24
கருணைமிக்க வார்த்தைகள் தேனைப் போன்றவை. அவை ஏற்றுக்கொள்ள எளிமையானவை, உடல் நலத்திற்கும் நல்லது.
நீதிமொழிகள் 16:24 ஆராயுங்கள்
4
நீதிமொழிகள் 16:1
ஜனங்கள் திட்டமிடுகின்றனர். ஆனால் காரியங்களை நிறைவேறச் செய்பவரோ கர்த்தர்.
நீதிமொழிகள் 16:1 ஆராயுங்கள்
5
நீதிமொழிகள் 16:32
வலிமைமிக்க வீரனாக இருப்பதைவிட ஒருவன் பொறுமை மிக்கவனாக இருப்பது நல்லது. ஒரு நகரத்தை அடக்கி ஆள்வதைவிட உன் கோபத்தை அடக்குவது நல்லது.
நீதிமொழிகள் 16:32 ஆராயுங்கள்
6
நீதிமொழிகள் 16:18
ஒருவன் கர்வம் கொண்டவனாக இருந்தால் அவன் அழிவின் ஆபத்தில் இருக்கிறான். மற்றவர்களைவிடத் தான் சிறந்தவன் என்று நினைப்பவன் தோல்வியின் ஆபத்தில் இருக்கிறான்.
நீதிமொழிகள் 16:18 ஆராயுங்கள்
7
நீதிமொழிகள் 16:2
ஒருவன் தான் செய்வதெல்லாம் சரி என்று நினைத்துக்கொண்டிருக்கின்றான். ஆனால் கர்த்தர் செயல்களின் காரணங்களை நியாயம் தீர்க்கின்றார்.
நீதிமொழிகள் 16:2 ஆராயுங்கள்
8
நீதிமொழிகள் 16:20
ஜனங்களின் போதனைகளைக் கவனமாகக் கேட்பவன் பயன் அடைவான். கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவன் ஆசீர்வதிக்கப்படுகிறான்.
நீதிமொழிகள் 16:20 ஆராயுங்கள்
9
நீதிமொழிகள் 16:8
ஒருவன் பிறரை ஏமாற்றி அதிகப் பொருள் சம்பாதிப்பதைவிட நல்ல வழியில் கொஞ்சம் பொருள் சம்பாதிப்பது நல்லது.
நீதிமொழிகள் 16:8 ஆராயுங்கள்
10
நீதிமொழிகள் 16:25
ஜனங்களுக்குச் சில வழிகள் சரியானதாக தோன்றும். அவ்வழிகள் மரணத்துக்கே அழைத்துச் செல்லும்.
நீதிமொழிகள் 16:25 ஆராயுங்கள்
11
நீதிமொழிகள் 16:28
தொல்லையை உருவாக்குகிறவன் எப்பொழுதும் பிரச்சனைகளை உண்டுபண்ணுகிறான். பொய்ச் செய்திகளைப் பரப்புகிறவன் நெருங்கிய நண்பர்களுக்குள் துன்பத்தை ஏற்படுத்துவான்.
நீதிமொழிகள் 16:28 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்