உண்மைக் கர்த்தர் மாதிரி

உண்மைக் கர்த்தர்

7 ல் 1 நாள்

கர்த்தர் நல்லவர்

A.W. டோசர் அவர்கள் சரியாகவே சொல்லியிருக்கிறார். கர்த்தரைப் பற்றி சிந்திக்கும் போது நம் மனதுக்குள் வருவது என்னவோ அது தான் நம்மைப் பற்றிய முக்கியமான அம்சமாகும் என்று அவர் எழுதியிருக்கிறார். 

ஏன்? நாம் கர்த்தரை ஒரு அகில உலக போலீஸ்காரராகப் பார்த்தோம் என்றால்  நாம் எப்போதுமே கயிற்றின் மேலேயே நடந்து கொண்டிருப்போம்.  அவரை ஒரு கொடூரமான நீதிபதியாகப் பார்த்தால், நாம் எப்போதுமே குற்ற உணர்வுடனேயே திரிந்து கொண்டிருப்போம். தூரத்தில் இருக்கும் நம் வாழ்வில் ஈடுபாடு காட்டாத படைப்பாளராகக் கண்டால், நம் பரலோகத் தந்தை நம் மீது அன்புடன் இருக்கிறார் என்று நம்புவது நமக்குக் கடினமாக இருக்கும். 

கர்த்தரைப் பற்றிய நமது கண்ணோட்டமானது நமது ஒவ்வொருநம்பிக்கையையும், உறவையும், பார்வையையும், மனப்பாங்கையும், தீர்மானத்தையும்… ஒவ்வொன்றையும் வடிவமைக்கிறது. 

நல்ல வேளையாக, கர்த்தர் தம்மை மோட்சத்துக்குள் மறைத்து வைத்துக் கொள்ளவில்லை. அவர் தன்னை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். அவர் வேதாகமத்தின் மூலம், இயற்கையின் மூலம், தன் மகனாகிய இயேசுவின் மூலம் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மனிதர்களாகிய நம்மைக் கர்த்தர் படைத்து, தான் யார் என்பதை வெளிப்படுத்தி, நம்முடன் உறவு  கொள்ளும்படியாக நம் இதயத்தைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்.  இப்படியாகத் தான் நாம் வடிவமைக்கப்பட்டிருக்கிறோம்: அவருடன் ஆழமான, தனிப்பட்ட நெருக்கமான உறவுக்காக! 

ஆனால் இப்படிப்பட்ட உறவைப் பெற்றுக் கொள்ள நாம் அவரை முழுவதுமாக நம்ப வேண்டும். அவர் நல்லவர் என்பதை விசுவாசிக்காமல் நாம் அவரை நம்ப முடியாது. 

அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக்கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன்… ” என்றுசொல்லி…  (யாத்திராகமம் 33:19)

ஒரு நல்ல கர்த்தர் உங்களுக்கு இருப்பதிலேயே மிகச் சிறந்ததைக்கொடுப்பதற்காக விருப்பத்துடன் இருக்கிறார் என்பதை நீங்கள் உண்மையிலேயே நம்பினால் உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும்? 

அது எவ்வாறு கீழ்க்கண்டவைகளைப் பாதிக்கும்:

·  உங்கள் மனப்பான்மை ? 

·  உங்கள் நம்பிக்கைகள்?

·  உங்கள் தீர்மானங்கள்? 

·  உங்கள் உந்துசக்தி?

·  பிறரை நம்பி நேசிக்கும் உங்கள் விருப்பம் ?

·  உங்களையே நீங்கள் நேசிக்கும் தன்மை?

விசுவாசம் பெறுவது உங்களுக்கு எளிதாக இருக்கும் அல்லவா? நீங்கள்நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இருப்பீர்கள். பாதுகாப்பாகஉணருவீர்கள். நம்பிக்கையுடன் நடப்பீர்கள், உறுதியுடன் பாராட்டப்படும் ஒரு குழந்தையைப் போல நடைபோடுவீர்கள். 

கர்த்தர் உங்கள் பக்கத்தில் இருக்கிறார். உங்களுக்கு எதிராக அவர் இல்லை. அவர் தாராள மனமுள்ளவர், உதார குணமுள்ளவர், உங்களை ஆசீர்வதித்துக் காக்க வாஞ்சையுள்ளவர். இந்த உண்மையை நீங்கள் இன்று தியானிப்பீர்களா?  இந்த உறுதியில் நீங்கள் வாழ்வீர்களாக, உண்மையான கர்த்தருடனான உறவை ஆழமாக்குவீர்களாக. 

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

உண்மைக் கர்த்தர்

நீங்கள் கர்த்தரை எவ்வாறு காண்கிறீர்கள்? இதற்கான பதிலானது உங்களையும், உங்கள் விசுவாசத்தையும், உங்களைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தையும், மனப்பாங்குகளையும், உறவுகளையும், இலக்குகளையும் - உங்கள் முழு வாழ்க்கையையும் வனைகின்றது. கர்த்தரைப் பற்றிய தவறான கண்ணோட்டம் வாழ்வின் போராட்டங்களிலேயே உழன்று கொண்டிருக்க வைக்கும். உண்மையான கர்த்தரை நாம் நன்றாக உற்றுப் பார்க்க வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். அது ஞானமுள்ள செயல். அதனால் உங்களது வாழ்க்கையும் வல்லமையான வழியில் மாற்றம் பெறும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: https://livingontheedge.org/