பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்

6 ல் 2 நாள்

மேற்சொன்ன வார்த்தைகள் இறைமைந்தன் இயேசு தன் வாயால் மொழிந்த அற்புத வார்த்தைகள் – அர்த்தமுள்ள வார்த்தைகள். இந்த வார்த்தைகளுக்கும் நாம் பார்த்து வரும் ஜெபம், பெற்றுக் கொள்ளும் விசுவாசம் இவற்றுடன் என்ன தொடர்பு? பெற்றுக்கொள்ளும் விசுவாசத்துடன் நாம் ஜெபிக்கும் போது நாம் மூன்று காரியங்களை நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும். 1. தேவனுடைய திட்டங்கள் - நமது திட்டங்களைக் காட்டிலும் பெரியவை 2. தேவன்- முடிவை ஆரம்பத்திலிருந்து பார்க்க முடியும்; அதினால் எனக்கு நேரிடும் யாவும் – சகலமும் என் நன்மைக்கு ஏதுவாக நடைபெறுகின்றன. 3. பெற்றும் கொள்ளும் விசுவாசம் கண்காணும் ஆதாரங்களை அல்ல, அது சார்ந்திருப்பது - தேவன் உண்மையுள்ளவர் – என் கண்களால் காண முடியாவிட்டாலும் நான் தொடர்ந்து ஜெபிப்பேன், நான் தொடர்ந்து நம்புவேன்; தேவனுடைய வேளைகள் (TIMINGS) பரிபூரணமானவைகள்; ஏற்றகாலத்தில் தேவன் எனக்கு நான் வேண்டிக்கொள்வதை தந்தருளுவார் - என்ற சத்தியம் ; பெற்றுக்கொள்ளும் விசுவாசம் உறுதியாகப் பற்றிகொண்டிருக்கும் - இந்த விசுவாசம், நம்பிக்கை ஆழ்ந்த பற்றுதல் உண்டாக

தேவனாலே எல்லாம் கூடும் என்ற சத்தியம் நம் ஆவியில் ஊறிப் போய் இருக்க வேண்டும்.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்

ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள்.....மாற்கு 11:24 ஒருகாலத்தில் இது எல்லாம் எனக்கு எட்டாத கனி என்று இருந்தவைகளை-உண்மையான விசுவாசத்துடன் ஜெபிக்கும் போது ஏற்றகாலத்தில் நிச்சயமாகப் பெற்றுக் கொள்வீர்கள். நமக்குள்ளே திசை தெரிந்து கொள்ள அல்லது சிக்கல் விடுவிக்க வேண்டும் என்ற ஆசை நம் வாழ்வின் ஒவ்வொரு மூலையிலும் - இருந்து வருகின்றது. உலகம் எனக்கு விடுக்கும் இந்த சவாலை நான் எப்படி மேற்கொள்வேன் என்பது நம் குடும்பத்தில், வேலைசெய்கின்ற இடத்தில் இருக்கும் கேள்வி. விசுவாசிக்கும் ஜெபம் என்றால் என்ன? ஏற்றகாலத்தில் நான் பெற்றுக் கொள்வேன் என்பதை நான் எதை வைத்து நம்புவது? போன்ற நல்ல கேள்விகளுக்கு- சத்தியத்தை -வேதாகம வார்த்தையைச்சார்ந்த பதிலை விசுவாசிக்கும் ஜெபத்தினால் மட்டுமே நாம் பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தான் இந்த வேதபாட திட்டத்தில் நாம் கற்றுக் கொள்ளப் போகிறேம். வாருங்கள்- விசுவாசித்துப் பெற்றுக் கொள்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d