பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

மிகவும் தீவிரமாக திறக்கவேண்டும் என நாம் காத்துக் கொண்டிருக்கின்ற கதவை தேவன் தாமே - ஏற்ற நேரத்திலே திறப்பார். நாம் விசுவாசத்துடன் பெற்றுக்கொள்வோம் என ஜெபிக்கும் வேளையிலே நாம் பெற்றுக்கொள்ள அவர் நம்மை ஆயத்தம் செய்கிறார். ஜெபத்தை பற்றி சரியாக நாம் அறிந்து இருக்க வேண்டும். ஜெபம் என்பது நமக்கு என்ன தேவையோ அதனை ஏதோ கேட்டுவிட்டு அது தோன்றும்வரை காத்திருப்பது இல்லை. மெய்யான ஜெபம் என்பது – மலையைப் பெயர்க்கும், மூடின கதவுகளை திறக்கும் ஜெபம் என்பது - நாம் எவ்வளவு தூரம் தோல்வியை ஒப்புக்கொண்டு , ஆண்டவரே, எனது சித்தம் அல்ல; உமது சித்தம் ஆகட்டும் என்று சொல்கிறோம் என்பதிலே வேர்பற்றி இருக்கின்றது.
நாம் முடிவில்லாமல் காத்திருப்பது போல இருந்தாலும் - கதவு திறக்கும் - அது சரியான நேரத்தில் திறக்கும். காத்திருக்கும் நேரம் நாம் நானே வாசல் என்பவரை பூரணமாக சார்ந்திருக்க கற்றுக் கொண்ட நேரமாக இருக்கும். அது விரயமான காலம் இல்லை. தடை நீக்கிப்போட்டு வாக்குதத்தம் செய்த தேசத்திற்கு ஏற்றவர்களாக இயேசு நம்மை பக்குவப்படுத்திய நாட்கள் அவை.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள்.....மாற்கு 11:24 ஒருகாலத்தில் இது எல்லாம் எனக்கு எட்டாத கனி என்று இருந்தவைகளை-உண்மையான விசுவாசத்துடன் ஜெபிக்கும் போது ஏற்றகாலத்தில் நிச்சயமாகப் பெற்றுக் கொள்வீர்கள். நமக்குள்ளே திசை தெரிந்து கொள்ள அல்லது சிக்கல் விடுவிக்க வேண்டும் என்ற ஆசை நம் வாழ்வின் ஒவ்வொரு மூலையிலும் - இருந்து வருகின்றது. உலகம் எனக்கு விடுக்கும் இந்த சவாலை நான் எப்படி மேற்கொள்வேன் என்பது நம் குடும்பத்தில், வேலைசெய்கின்ற இடத்தில் இருக்கும் கேள்வி. விசுவாசிக்கும் ஜெபம் என்றால் என்ன? ஏற்றகாலத்தில் நான் பெற்றுக் கொள்வேன் என்பதை நான் எதை வைத்து நம்புவது? போன்ற நல்ல கேள்விகளுக்கு- சத்தியத்தை -வேதாகம வார்த்தையைச்சார்ந்த பதிலை விசுவாசிக்கும் ஜெபத்தினால் மட்டுமே நாம் பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தான் இந்த வேதபாட திட்டத்தில் நாம் கற்றுக் கொள்ளப் போகிறேம். வாருங்கள்- விசுவாசித்துப் பெற்றுக் கொள்வோம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

மனஅழுத்தம்

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்

குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்

மன்னிப்பு என்பது ...

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

விசுவாசம் vs பயம்

பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்
