பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

சிலநேரங்களில் நமக்கு ஊறுவிளைவிக்கும் என்று இருக்கும் கதவுகள் மூடியிருக்கும். அந்த இடர்களில் இருந்து பாதுகாக்க, அல்லது அவருடைய நோக்கத்திற்கு இசைவாக இல்ல்லாத விஷயங்களில் இருந்து நம்மை பாதுகாக்க - தேவன் ஏற்படுத்தின ஏற்பாடாகவும் இருக்கும். நாம் முழு படத்தையும் பார்ப்பதில்ல்லை, திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது – தேவன் தாமே எவ்வாறு காய்களை நகர்த்தி வருகின்றார் என்பதும் நமக்கு தெரியாது.
இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது மூடினதாக இருக்க கூடிய கதவு நிரந்தரமானது அல்ல. நாம் பெற்றுக்கொள்ளும் விசுவாசத்துடன் ஜெபிக்கும் போது நாம் காத்திருக்கும் அந்த அமைதியான வேளையிலும் தேவன் செயல்பட்டு வருகின்றார் என்று அங்கீகரிக்கிறோம்.அவருடைய வேளையில்- மூடிய கதவுகள் விரிவாக திறக்கும். அசாத்தியமானவைகள் நமக்கு சாத்தியமானவை ஆகும். அப்பொழுது நாம் செயல்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம் அந்த திறந்த வாசல்வழியாக பிரவேசிக்க வேண்டும். இதனைத் தான் இன்றைய யாக்கோபு புத்தகத்தில் நம்முடைய கீழ்ப்படிதலின் அடிகள் எடுத்து வைக்கப்பட வேண்டியவை என்பதை வேறு வார்த்தைகளில் - கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கும் என்று கற்றுக்கொள்கிறோம். நாம் முன்னேறிச் செல்ல கட்டளைபெற்றதும். அறியாதவற்றுக்குள் குதித்திடவேண்டும் - முன்னேற வேண்டும் அதற்கு தைரியம் வேண்டும். அந்த தைரியத்தையும் வல்லமையையும் கூட தேவன் அவரே தந்தருளுவார்.
பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்- இயேசு. ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள்.....மாற்கு 11:24 ஒருகாலத்தில் இது எல்லாம் எனக்கு எட்டாத கனி என்று இருந்தவைகளை-உண்மையான விசுவாசத்துடன் ஜெபிக்கும் போது ஏற்றகாலத்தில் நிச்சயமாகப் பெற்றுக் கொள்வீர்கள். நமக்குள்ளே திசை தெரிந்து கொள்ள அல்லது சிக்கல் விடுவிக்க வேண்டும் என்ற ஆசை நம் வாழ்வின் ஒவ்வொரு மூலையிலும் - இருந்து வருகின்றது. உலகம் எனக்கு விடுக்கும் இந்த சவாலை நான் எப்படி மேற்கொள்வேன் என்பது நம் குடும்பத்தில், வேலைசெய்கின்ற இடத்தில் இருக்கும் கேள்வி. விசுவாசிக்கும் ஜெபம் என்றால் என்ன? ஏற்றகாலத்தில் நான் பெற்றுக் கொள்வேன் என்பதை நான் எதை வைத்து நம்புவது? போன்ற நல்ல கேள்விகளுக்கு- சத்தியத்தை -வேதாகம வார்த்தையைச்சார்ந்த பதிலை விசுவாசிக்கும் ஜெபத்தினால் மட்டுமே நாம் பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தான் இந்த வேதபாட திட்டத்தில் நாம் கற்றுக் கொள்ளப் போகிறேம். வாருங்கள்- விசுவாசித்துப் பெற்றுக் கொள்வோம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்

மனஅழுத்தம்

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்

மன்னிப்பு என்பது ...

விசுவாசம் vs பயம்

பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்
