பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்

6 ல் 1 நாள்

ஜெபம் – ஒரு சடங்கு அல்ல. சர்வலோகத்தையும் சிருஷ்டித்த சிருஷ்டிகருடன் - ஒரு நெருக்கமான சம்பாஷணை. இதில் நடப்பது என்ன? நாம் நமது பாரங்களை, பயங்களை நமது நிச்சயமற்ற தன்மைகளை அவரிடத்தில் இறக்கி வைத்துவிட்டு அவரது வழிகாட்டலை, அவர் தரும் சமாதானத்தை எடுத்துக் கொள்ளுதல். இதில் வேறொரு பரிமாற்றமும் நிகழ்கின்றது – அதாவது நம்து சித்தம்/ விருப்பத்தையும், நாம் நமது கால அட்டவணையையும் அவரிடத்தில் சமர்ப்பிக்கிறோம். சமர்ப்பித்தவுடன் தான்--- நமக்கு என்னவெல்லாம் நடக்கிறதோ அதற்கு பின்னணியில் தெய்வீக திட்டம், தெய்வீக நோக்கம் இருக்கின்றது என்ற ஆழமான சத்தியம் புரிய வரும். நமக்கு போராட்டமே தேவனுடைய வேளையை புரிந்துகொள்வதில் தான். நாம் – கேட்டுவிட்டேன், தேடிவிட்டேன் தட்டிவிட்டேன் – ஆனாலும் ஏன் இன்னும் இந்த கதவு திறக்கவில்லை என்று உடனே சோர்ந்து களைத்துப் போய்விடுகிறோம்.

சமாதானத்துக்கான நினைவுகள்: இந்த இடத்தில் தான் நம்முடைய விசுவாசம் அந்த மூடின கதவை திறக்கவல்ல சாவியாகவும், நாம் காத்திருந்து-அமைதியாக இருக்க வேண்டிய நேரத்தில் தேவன் எனக்காக - நான் கற்பனைசெய்வதைக்காட்டிலும் பெரிதான ஒரு வழியை எனக்காக ஆயத்தம் செய்துகொண்டிருக்கின்றார் என்று- நாம் பெற்றுக்கொள்ளும் வரை காத்திருக்கத் தேவையான வல்லமையையும் தருகின்றது.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்

ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள்.....மாற்கு 11:24 ஒருகாலத்தில் இது எல்லாம் எனக்கு எட்டாத கனி என்று இருந்தவைகளை-உண்மையான விசுவாசத்துடன் ஜெபிக்கும் போது ஏற்றகாலத்தில் நிச்சயமாகப் பெற்றுக் கொள்வீர்கள். நமக்குள்ளே திசை தெரிந்து கொள்ள அல்லது சிக்கல் விடுவிக்க வேண்டும் என்ற ஆசை நம் வாழ்வின் ஒவ்வொரு மூலையிலும் - இருந்து வருகின்றது. உலகம் எனக்கு விடுக்கும் இந்த சவாலை நான் எப்படி மேற்கொள்வேன் என்பது நம் குடும்பத்தில், வேலைசெய்கின்ற இடத்தில் இருக்கும் கேள்வி. விசுவாசிக்கும் ஜெபம் என்றால் என்ன? ஏற்றகாலத்தில் நான் பெற்றுக் கொள்வேன் என்பதை நான் எதை வைத்து நம்புவது? போன்ற நல்ல கேள்விகளுக்கு- சத்தியத்தை -வேதாகம வார்த்தையைச்சார்ந்த பதிலை விசுவாசிக்கும் ஜெபத்தினால் மட்டுமே நாம் பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தான் இந்த வேதபாட திட்டத்தில் நாம் கற்றுக் கொள்ளப் போகிறேம். வாருங்கள்- விசுவாசித்துப் பெற்றுக் கொள்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d