1
நீதிமொழி 10:22
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
யெகோவாவின் ஆசீர்வாதம் செல்வத்தைக் கொண்டுவருகிறது; அதனுடன் அவர் துன்பத்தைச் சேர்க்கமாட்டார்.
ஒப்பீடு
நீதிமொழி 10:22 ஆராயுங்கள்
2
நீதிமொழி 10:19
அதிக வார்த்தைகள் பேசும் இடத்தில் பாவமில்லாமற்போகாது; ஆனால் தன் நாவைக் கட்டுப்படுத்துகிறவனோ விவேகமுள்ளவன்.
நீதிமொழி 10:19 ஆராயுங்கள்
3
நீதிமொழி 10:12
பகைமை பிரிவினையைத் தூண்டிவிடுகிறது; அன்போ பிழைகளையெல்லாம் மன்னித்து மறக்கிறது.
நீதிமொழி 10:12 ஆராயுங்கள்
4
நீதிமொழி 10:4
சோம்பேறிகளின் கைகள் வறுமையை உண்டாக்கும், ஆனால் உழைக்கும் கைகளோ செல்வத்தைக் கொண்டுவரும்.
நீதிமொழி 10:4 ஆராயுங்கள்
5
நீதிமொழி 10:17
நற்கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ளுகிறவன் வாழ்வின் வழியைக் காட்டுகிறான்; ஆனால் கண்டித்துத் திருத்துவதை அலட்சியம் செய்கிறவனோ, மற்றவர்களையும் வழிதவறப்பண்ணுகிறான்.
நீதிமொழி 10:17 ஆராயுங்கள்
6
நீதிமொழி 10:9
நேர்மையாய் நடக்கிறவர்கள் பாதுகாப்பாக நடக்கிறார்கள், ஆனால் நேர்மையற்ற வழிகளில் நடக்கிறவர்கள் வீழ்ந்து போவார்கள்.
நீதிமொழி 10:9 ஆராயுங்கள்
7
நீதிமொழி 10:27
யெகோவாவுக்குப் பயந்து நடப்பது வாழ்நாட்களை நீடிக்கும், ஆனால் கொடியவர்களின் வருடங்களோ குறைக்கப்படும்.
நீதிமொழி 10:27 ஆராயுங்கள்
8
நீதிமொழி 10:3
யெகோவா நீதிமான்களைப் பசியாயிருக்க விடுவதில்லை, ஆனால் கொடியவர்களின் பேராசையை அவர் நிறைவேற்றமாட்டார்.
நீதிமொழி 10:3 ஆராயுங்கள்
9
நீதிமொழி 10:25
சுழல் காற்று அடித்துச் செல்லும்போது, கொடியவர்கள் இல்லாமற்போவார்கள்; ஆனால் நீதிமான்கள் என்றென்றைக்கும் உறுதியாய் நிலைத்து நிற்பார்கள்.
நீதிமொழி 10:25 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்